வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Coimbatore: வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 13 பேர் டெம்போ டிராவலர் வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து மீண்டும் கீழிறங்கி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பாதையின் 13வது கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து வழுக்கி பள்ளத்தில் கவிழ்ந்து, 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி சரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கோடைக்கால சுற்றுலா துவங்கியுள்ள நிலையில், மக்களிடையே இந்த விபத்து பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “விபத்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடையவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலின்படி, கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 13 பேர் டெம்போ டிராவலர் வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து மீண்டும் கீழிறங்கி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பாதையின் 13வது கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து வழுக்கி பள்ளத்தில் கவிழ்ந்து, 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி சரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கோடைக்கால சுற்றுலா துவங்கியுள்ள நிலையில், மக்களிடையே இந்த விபத்து பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “விபத்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடையவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.