சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, “சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குங்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சரும், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகருமான சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



பிரச்சாரத்திற்கு முன், வடவள்ளியில் அமைந்துள்ள முத்தப்பசாமி கோவிலுக்கு சென்ற சுரேஷ் கோபி மற்றும் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மலையாளி மக்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, வானதி சீனிவாசனை தனது சகோதரியாக குறிப்பிட்டு, அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



தொடர்ந்து முத்தப்பசாமி கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, வடவள்ளி மகாராணி அவென்யூ, காட்டு விநாயகர் கோவில் பகுதி, டாட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் சுரேஷ் கோபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “வானதி சீனிவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் தைரியமாக குரல் கொடுத்தார். சட்டமன்றத்தின் சிம்மக் குரலாக விளங்கிய வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்”, என்றார்.

மேலும், அவரைப் போன்ற பலர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக கோவை வடக்கு மக்கள் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...