கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பிடித்து, அவரிடமிருந்த ரொக்கப் பணத்துடன் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது பணப்பட்டுவாடா புகார்களால் சூடுபிடித்துள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி வீதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அப்பகுதியில் இருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கவனித்தனர்.

அவரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அருகிலிருந்த சாலைவழியாக தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயிரிட்டேரி, புதுப்பாலம் அருகே அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் கரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரது பையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பணத்தையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கோவை வடக்கு தொகுதியில் கரூரில் இருந்து வந்த குழுவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றனர் என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...