கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பிடித்து, அவரிடமிருந்த ரொக்கப் பணத்துடன் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது பணப்பட்டுவாடா புகார்களால் சூடுபிடித்துள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி வீதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அப்பகுதியில் இருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கவனித்தனர்.

அவரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அருகிலிருந்த சாலைவழியாக தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயிரிட்டேரி, புதுப்பாலம் அருகே அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் கரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரது பையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பணத்தையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கோவை வடக்கு தொகுதியில் கரூரில் இருந்து வந்த குழுவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றனர் என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...