கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனல் நிறுவனருமான செந்தில்வேல் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியின் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



அதற்கு முன்பாக, பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனலின் நிறுவனருமான செந்தில்வேல், திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்காக இந்த ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் ஆரோக்கியத்தை பாதுகாக்க கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை வழங்கி பெண்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.



மேலும், “எதிர்க்கட்சிகளிடம் மக்களுக்காக செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் பாஜகவே எடுக்கிறது. தமிழ்நாட்டில் சாதி, மத அரசியலை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,” என குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...