பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.


கோவை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டன.



2026 சட்டமன்றத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...