கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் வாக்களிக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் Stalin கோரிய நிலையில் இது நடந்துள்ளது.


Coimbatore: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் வாக்களிக்காதது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.




Jayalalithaa ஆட்சி காலத்தில் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. Jayalalithaa மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்து அமைச்சர் பதவியும் பெற்றார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் அமைச்சர் பதவியை இழந்தார்.




செந்தில் பாலாஜி இருந்தால் கரூரில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது முதல்வர் Stalin நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரம் Vijay கரூருக்கு சென்றபோது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் செந்தில் பாலாஜி மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்ததால் இந்த முறை அவரை கோவையில் களமிறக்கினார் முதல்வர் Stalin. அதோடு, கோவை திமுக தேர்தல் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜியை நியமித்தார்.




இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை. வழக்கமாக செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர் ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையத்தில் உள்ள வாக்கு சாவடியில் தான் வாக்களிப்பார். ஆனால் நேற்று காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் Ashok Kumar அங்கு வந்து வாக்களித்த போது 'அண்ணன் வருவார்' என அவர் சொல்லிவிட்டு சென்றார்.




ஆனால் மாலை 6 மணி ஆகியும் செந்தில் பாலாஜி அங்கு வந்து வாக்களிக்கவில்லை. செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாலும், கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவர் கரூருக்கு வாக்களிக்க வரவில்லை என சொல்லப்படுகிறது.




அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என முதல்வர் Stalin கோரிக்கை வைத்த நிலையில் செந்தில் பாலாஜியே அதை பின்பற்றவில்லை என அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...