தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த சந்திரசேகர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கியவர் தலைமறைவாகி உள்ளதால் அலங்கியம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் தம்பி தனது அண்ணனை அருவாளால் வெட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அண்ணன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கியவர் தலைமறைவாகியுள்ளதால் அலங்கியம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திரசேகர் (வயது 50). இவர் தற்போது ஆட்சியூர் சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியில் தனது தம்பி சேனாதிபதியுடன் குடியிருந்து வருகிறார்.


நேற்று மாலை இருவரும் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கடும் சண்டையாக மாறியதில், ஆத்திரமடைந்த தம்பி சேனாதிபதி மறைத்து வைத்திருந்த அருவாளால் தனது அண்ணன் சந்திரசேகரை கழுத்து மற்றும் கை பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் சந்திரசேகர் படுகாயமடைந்து ரத்தக்களரியில் சுருண்டு விழுந்தார்.


இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக களத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவரது நிலை தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இச்சம்பவம் குறித்து அலங்கியம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணனை அருவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான தம்பி சேனாதிபதியை கைது செய்ய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் இவ்வாறு இரத்தக்களரி சம்பவமாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து அலங்கியம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...