கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.  அதில் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை கண்ணப்பநகர் பகுதியில் உள்ள 11 to 11 டாஸ்மாக் பார் அருகே அமைந்திருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



நேற்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றிய நிலையில் சுற்றியிருந்தவர்களின் மீது தீப்பொறி சிதறியது.

இதில் மதுரை வீரன் (23) என்பவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த மதுரை வீரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர்.



சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் கண்ணப்பநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடிப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...