கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,181 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
Coimbatore:
கோவை: 2026–2027 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
சுமார் 5,500 மையங்களில் 22.80 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள் மற்றும் 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்துகிறது.
கோவையில் 16 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: சூலூர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா, அவிநாசி சாலை சி.ஜி.டி கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி, சிவில் ஏரோ பி.எஸ்.ஜி கல்லூரி, சுங்கம் நிர்மலா கல்லூரி, ஜி.என் மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மாதிரி பள்ளி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, பாரதி பார்க் அவிநாசிலிங்கம் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
அதன்படி, 2026–27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும். தேர்வு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்போன், கை கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: 2026–2027 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
சுமார் 5,500 மையங்களில் 22.80 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள் மற்றும் 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்துகிறது.
கோவையில் 16 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: சூலூர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா, அவிநாசி சாலை சி.ஜி.டி கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி, சிவில் ஏரோ பி.எஸ்.ஜி கல்லூரி, சுங்கம் நிர்மலா கல்லூரி, ஜி.என் மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மாதிரி பள்ளி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, பாரதி பார்க் அவிநாசிலிங்கம் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
அதன்படி, 2026–27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும். தேர்வு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்போன், கை கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.