கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் V. கலைசெல்வன் பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் முனைவர் R. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் S. ராம் காந்த் தலைமை தாங்கினார்.



பட்டமளிப்பு விழாவில் இந்திய மருந்தியல் ஆணையத்தின் (IPC) செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குனர் டாக்டர் V. கலைசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். பல்கலைக்கழக மற்றும் GPAT தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



சிறப்பு விருந்தினர் பேசுகையில் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதில் மருந்தாளுனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று வலியுறுத்தினார். மருந்தாளுனர்களின் தொழில்முறை பொறுப்பு குறித்தும் அவர் மாணவர்களுக்கு வழிகாட்டினார்.



இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் மோகன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...