கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி சராசரியாக 7.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விரிவான விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நகரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.


பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட விவரப்படி, கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5.10 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 15.20 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 11.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர், பில்லூர் அணைக்கட்டு பகுதியில் 10 மில்லி மீட்டர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 33 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 1.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


போத்தனூர் ரயில் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் 0.60 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆழியாறு சுற்றுவட்டார பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகளில் 3 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லி மீட்டர் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.


இதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் நேற்று 7.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...