வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வனத்துறை தீவிர நடவடிக்கை.


Coimbatore: வால்பாறை மலைப்பகுதிக்கு செல்ல இ-பாஸ் அவசியம் என்ற நிலையில், இன்று ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் நீண்ட தூரம் பயணித்து வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.




சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வால்பாறைக்கு 750 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், இன்று ஆழியார் சோதனைச் சாவடியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் குவிந்தன.






இ-பாஸ் கட்டாயம் என வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்ததால், முன்கூட்டியே இ-பாஸ் பெறாத வாகனங்கள் சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. பல மணி நேரம் பயணம் செய்து வந்த பயணிகள் மலைப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.




வால்பாறை மலைப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் வனத்துறையினர் ஆழியார் சோதனைச் சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.




வனத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற்று வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு எந்த விதத்திலும் அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் வால்பாறைக்கு செல்ல திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முன்கூட்டியே இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...