காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.


கோவை: மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மாநகரில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுகவினரிடமிருந்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன், “மயிலாடுதுறையில் தாக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி தவெக வுக்கு ஆதரவு அளித்த சூழலில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

எனவே, இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...