வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை தலைமை அஞ்சலகம் அருகே நடந்த பதைபதைப்பான சாலை விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.




வால்பாறை தலைமை அஞ்சலகம் அருகே நாகராஜ் (65) என்பவர் தனது காரை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு நடந்து சென்ற வேவர்லி எஸ்டேட்டைச் சேர்ந்த கவிதா (47) என்பவர் மீது கார் பலமாக மோதியது.




மோதலின் தாக்கத்தால் கவிதா பல அடி தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கவிதா உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.




மேல்சிகிச்சைக்காக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.




சிசிடிவி காட்சிகளில், கார் பெண் மீது மோதி அவர் காற்றில் பறந்து சென்ற காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநர் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...