கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக பில்லூர் காவல் நிலைய காவலர் ஒருவர் மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த குப்புராஜின் மகன் உதயகுமார், பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இவர் பேரூர் அருகே வசிக்கும் 27 வயது இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகாதவர் என நம்பவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
கர்ப்பமான தகவல் தெரியவந்ததும், அந்த பெண்ணை வடவள்ளி மற்றும் அவிநாசி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், காவலர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது வாழ்க்கையை ஏமாற்றியதாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, “இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், இருவரும் தனியாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்; கொலை செய்து விடுவேன்” என்று காவலர் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காவலர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த குப்புராஜின் மகன் உதயகுமார், பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இவர் பேரூர் அருகே வசிக்கும் 27 வயது இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகாதவர் என நம்பவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
கர்ப்பமான தகவல் தெரியவந்ததும், அந்த பெண்ணை வடவள்ளி மற்றும் அவிநாசி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், காவலர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது வாழ்க்கையை ஏமாற்றியதாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, “இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், இருவரும் தனியாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்; கொலை செய்து விடுவேன்” என்று காவலர் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காவலர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.