திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக பில்லூர் காவல் நிலைய காவலர் ஒருவர் மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த குப்புராஜின் மகன் உதயகுமார், பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

இவர் பேரூர் அருகே வசிக்கும் 27 வயது இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகாதவர் என நம்பவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

கர்ப்பமான தகவல் தெரியவந்ததும், அந்த பெண்ணை வடவள்ளி மற்றும் அவிநாசி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், காவலர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது வாழ்க்கையை ஏமாற்றியதாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு, “இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், இருவரும் தனியாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்; கொலை செய்து விடுவேன்” என்று காவலர் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் காவலர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...