மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை கட்டுப்படுத்த முழுமையான மதுவிலக்கே நிரந்தர தீர்வு என்றும், கள்ளுக்கு அனுமதி வழங்கி விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கோவை:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் தனது கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தேர்தலில் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த தேர்தலில் கொமதேக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் நித்தியானந்தம் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படுவார் என்றும், கொங்கு மண்டல வளர்ச்சிக்காக தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது அரசியலில் இயல்பானது என்றும், தோல்விக்குப் பிறகு கட்சியை பிரிப்பதை விட ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் முதல் கட்டமாக சில டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறித்து பேசிய ஈஸ்வரன், அந்த நடவடிக்கையை வரவேற்றாலும், கடைகள் மூடப்பட்ட இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சில கடைகளை மூடுவதால் மட்டும் மது பழக்கத்தை குறைக்க முடியாது என்றும், டாஸ்மாக் வருமானம் குறையாமல் இருந்தால் விற்பனை குறையவில்லை என்பதற்கே அது சான்று என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...