கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


கோவை:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைத்துவ மோதல்கள் காரணமாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் சூழலில், கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவராக இருந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கிடையேயான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அரசியல் இயக்கங்களில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த மனக்கசப்புகள் மற்றும் சில சம்பவங்கள் தன்னை மனரீதியாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி அமைதியாக செயல்பட முயன்றபோதும், தற்போதைய சூழலில் முழுமையான மனநிறைவுடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்ட ஆலோசனை மற்றும் மனப்போராட்டத்திற்குப் பிறகு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழக அரசில் அமைச்சராக உள்ள செங்கோட்டையனை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...