கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


கோவை:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைத்துவ மோதல்கள் காரணமாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் சூழலில், கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவராக இருந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கிடையேயான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அரசியல் இயக்கங்களில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த மனக்கசப்புகள் மற்றும் சில சம்பவங்கள் தன்னை மனரீதியாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி அமைதியாக செயல்பட முயன்றபோதும், தற்போதைய சூழலில் முழுமையான மனநிறைவுடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்ட ஆலோசனை மற்றும் மனப்போராட்டத்திற்குப் பிறகு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழக அரசில் அமைச்சராக உள்ள செங்கோட்டையனை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...