“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் “மே கார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி கோவையில் தொடங்கியது.


கோவை:

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மே கார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது.



மே 14 முதல் 16, 2026 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நவீன பல் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.



மேலும், ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிப்பதற்கான வழிமுறைகள், வாய்வழி சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் பல் பராமரிப்பு குறித்த பல்வேறு தகவல்களை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெ. தினகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



“மே கார்னிவல் 2026” நிகழ்ச்சியில் வாய்நல விழிப்புணர்வு சொற்பொழிவுகள், பல் சிகிச்சை கண்காட்சிகள், கல்வி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு விளையாட்டுகள் மற்றும் சரியான பல்துலக்கும் முறைகள் குறித்த நேரடி விளக்கங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், நிகழ்ச்சியில் பதிவு செய்யும் பொதுமக்களுக்கு இலவச பல் மருத்துவ வெளிநோயாளர் பதிவு அட்டையும், குறிப்பிட்ட பல் சிகிச்சைகளுக்கு மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 20 சதவீத சிறப்பு சலுகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...