கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்கு பிறகு தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவர், தவெக-வின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார். தற்போது, சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையத்தில் தொடங்கி சித்ரா, காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், கணுவாய், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை பொதுமக்களை சந்தித்து வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் தேவைகளுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என உறுதியளித்தார்.


Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...