கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்டவாள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை:

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உள்ளிட்ட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக இருகூர் - போத்தனூர், கோவை - வடகோவை மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளுக்கு இடையேயான ரயில் வழித்தடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டில் ஒண்டிப்புதூர் மற்றும் ப்ரூக்ஃபீல்டு பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி மற்றும் இன்ஜின் விளக்குகள் சேதமடைந்ததுடன், சரக்கு ரயிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களில் தொடர்புடையதாக 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் மீது கல்வீச்சு நடத்துவது மனித உயிருக்கும் ரயில்வே பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினர்.

மேலும், சிறார்களின் செயல்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மீது கல்வீச்சு தொடர்பான புகார்களை 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...