கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளனர்.
Coimbatore: கோவை: கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட துடியலூர், வடமதுரை, முல்லை நகர், அப்பநாயக்கன்பாளையம், விஎஸ்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், மாலை நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மழை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், மாலை நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மழை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.