கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: பீளமேடு முருகன் கோயில் வீதியில் உள்ள நியாய விலை கடையைப் பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்குப் பொருட்கள் அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 



தொடர்ந்து, பீளமேடு அவிநாசி பிரதான சாலை EB அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்ட பணியைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க 'விழிப்புணர்வு பிளக்ஸ்' வைக்குமாறு வார்டு சூப்பர்வைசருக்கு அறிவுறுத்தினார்.



மேலும், பாரதி காலனி 4-வது வீதி மற்றும் கோபால் நகர் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி மற்றும் ஆட்டோக்கள் சரியாக வருகிறதா என ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், சாலையோர மரக்கழிவுகளைத் தினசரி சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 



அதனைத் தொடர்ந்து, சாந்தி நகர் பகுதியில் நடைபெற்ற சாக்கடை தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு, சாக்கடையை முழுமையாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 



இந்த ஆய்வுகளின் போது நியாய விலை கடை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்குமார் (27அ வட்ட பொறுப்பாளர்), தேவி (BLA2) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...