நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை:

கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து கலக்கப்படுவதால், ஆற்றின் நீர்தன்மை மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.



இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “Let’s Make Coimbatore Sweet Again” என்ற முன்னெடுப்பின் கீழ் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகள் மனு அளித்து, நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி, “அரசாங்கமே சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலக்குகிறது. தனியார் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் இதற்கு காரணமாக உள்ளன,” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “நொய்யல் ஆற்றின் நீர் மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அதில் அதிக அளவில் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நொய்யல் ஆறு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.

புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், முதல் கட்டமாக 700-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், “அதைவிட முக்கியமானது குடிநீர் பாதுகாப்பு பிரச்சனை. மது அருந்துபவர்கள் பணம் கொடுத்து வாங்கி அருந்துகின்றனர். ஆனால் பொதுமக்கள் தினமும் குடிநீர் என்ற பெயரில் விஷத்தை குடித்து வருகின்றனர்,” என்று கூறினார்.

மேலும், கோவையில் பல கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் சூயஸ் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், “வேங்கை வயலுக்கு ஒரு நியாயம், நொய்யலுக்கு ஒரு நியாயம் என்ற நிலை இருக்கக் கூடாது. அரசாங்கமே கழிவுநீரை ஆற்றில் கலக்க அனுமதிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...