கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கம் (OSMA) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: ஜவுளித் தொழில் சார்ந்த தொழில் முனைவோருடன் மத்திய ஜவுளித்துறை ஆணையர் விருந்தா மனோகர் தேசாய் கலந்துரையாடிய நிகழ்ச்சி வியாழக்கிழமை கோவையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (OSMA) நிர்வாகிகள், மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறுகையில், “கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓபன் எண்ட் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து அதன் ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

மேலும், “ஓபன் எண்ட் (OE) நூல்களுக்கு தனி ‘HSN Code’ வழங்க வேண்டும் என்பதையும் மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சங்க நிர்வாகிகள் முருகேசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...