கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கம் (OSMA) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: ஜவுளித் தொழில் சார்ந்த தொழில் முனைவோருடன் மத்திய ஜவுளித்துறை ஆணையர் விருந்தா மனோகர் தேசாய் கலந்துரையாடிய நிகழ்ச்சி வியாழக்கிழமை கோவையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (OSMA) நிர்வாகிகள், மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறுகையில், “கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓபன் எண்ட் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து அதன் ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

மேலும், “ஓபன் எண்ட் (OE) நூல்களுக்கு தனி ‘HSN Code’ வழங்க வேண்டும் என்பதையும் மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சங்க நிர்வாகிகள் முருகேசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...