கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்துள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதன்படி, மே 20 முதல் ஜூன் 5 வரை வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை அடையும். மறுபயணமாக, மே 20 முதல் ஜூன் 5 வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.




இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையில் சென்னை செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...