தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி மே 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். ரூ.1,770 கட்டணத்தில் உலர்ந்த தக்காளி, சாஸ், கற்றாழை பானம், மிட்டாய் தயாரிப்பு கற்பிக்கப்படும்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19.05.2026 மற்றும் 20.05.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பயிற்சி வேளாண் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக அமையும்.




பயிற்சியில் தக்காளியிலிருந்து உலர்த்தப்பட்ட தக்காளி, ஊறுகாய், சாஸ், ketchup, சூப் பவுடர், ஜாம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்படும். கற்றாழையிலிருந்து பழரச பானம், தயார் நிலை பானம், பானம், மிட்டாய் ஆகியவற்றை தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்படும்.




இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தலாம்.




பயிற்சி அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 இல் நடைபெறும். பயிற்சியாளர்கள் வாயில் எண் 7, மருதமலை சாலை வழியாக பயணித்து வரலாம்.




மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 என்ற முகவரியிலும், 94885 18268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...