“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறையிலும் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore:

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றியும், தண்ணீர் வசதி இன்றியும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையின் செயல்படும் சிறுநீரக வார்டில் நாள்தோறும் 30 முதல் 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தினமும் தங்கி உள்ளனர். ஆனால், இத்தனை பேருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண்களுக்கான கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருப்பதால், பெண் நோயாளிகள் மற்றும் பெண்கள் உறவினர்கள் ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதாரமற்ற நிலை அவர்களின் உடல்நலத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கழிப்பறைகளில் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதுடன், தண்ணீர் இல்லாத நிலை, உணவுக் கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் வயதான நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறுகையில், “கடந்த 7 மாதங்களாக இந்த வார்டுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை. மருத்துவக் கழிவுகள் மற்றும் உணவுக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஒரு வார்டில் மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பல வார்டுகளிலும் இதே நிலை நீடிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை பெரிதும் நம்பி வரும் பொதுமக்களுக்கு கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை உரிய சுகாதாரத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...