நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


Coimbatore: தமிழர்களின் தொன்மையான சோழர் வரலாற்றுப் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவித பாராட்டும் தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பியிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சம்பவம் என்றும், ஆனால் மாநில முதலமைச்சர் இதுகுறித்து மௌனம் காக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாறையும் உலக அரங்கில் மீண்டும் உயர்த்திய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி கூட தெரிவிக்காதது வெறும் மறதி அல்ல; அது திட்டமிட்ட அலட்சியம் போல தெரிகிறது” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியர் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்ப வருகின்றன. இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்த செப்பேடுகளில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழன் வழங்கிய வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதற்கான சான்றுகளாக இவை விளங்குகின்றன. சோழர்களின் பெருமை, கலாச்சாரம் மற்றும் கடற்படை திறனை இந்தியர்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “இந்த செப்பேடுகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசுக்கும், லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...