ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.


Coimbatore: ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இத்துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நெசவாளர்கள் விசைத்தறி தொழிலின் மூலம் 1.60 லட்சம் மின் இணைப்புகளுடன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் பெடல் தறிகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் மூலம் தினந்தோறும் மூன்று கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு மின்சார சலுகை, நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நெசவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் தமிழக ஜவுளித்துறை இந்திய அளவிலும், உலகளவிலும் முன்னிலை வகிக்க, ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை நியமிக்கும் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்க தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...