அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டியுள்ளார்.


கோவை: பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் என மொத்தம் 620 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.



ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், சமீப காலங்களில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்பது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், சுவையுடன் கூடிய தரமான உணவுகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

மேலும், இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான செலவுகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...