கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ(எம்) கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுநீரகவியல் துறையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் கழிவறைகள் மிகக் குறைவாக உள்ளதுடன், அவையும் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு கூடுதல் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, சிபிஐ(எம்) கோவை மாவட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவக் கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...