கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ(எம்) கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுநீரகவியல் துறையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் கழிவறைகள் மிகக் குறைவாக உள்ளதுடன், அவையும் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு கூடுதல் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, சிபிஐ(எம்) கோவை மாவட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவக் கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...