சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் துறை ₹19,500 அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கியது.
Coimbatore: கோவை சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி மற்றும் ஆட்டம் போட்டபடி வேகமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, வைரலான வீடியோவை அடிப்படையாக கொண்டு வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கோவை மாநகர காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தமாக ₹19,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் காவல் துறையினர் எச்சரித்து, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.
இதையடுத்து, வைரலான வீடியோவை அடிப்படையாக கொண்டு வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கோவை மாநகர காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தமாக ₹19,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் காவல் துறையினர் எச்சரித்து, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.