கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் துறை ₹19,500 அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கியது.


Coimbatore: கோவை சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி மற்றும் ஆட்டம் போட்டபடி வேகமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, வைரலான வீடியோவை அடிப்படையாக கொண்டு வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கோவை மாநகர காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தமாக ₹19,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் காவல் துறையினர் எச்சரித்து, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...