நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AIYF, AISF உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Coimbatore: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை (NTA) கலைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AISF, AIYF உள்ளிட்ட இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் DYFI மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் AIYF மாவட்ட தலைவர் அபிமன்யு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “நீட் தேர்வை ரத்து செய்”, “தேசிய தேர்வு முகமையை கலைத்திடு”, “12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திடு” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நீட் தேர்வு முறையே வணிகமாக மாறிவிட்டதாகவும், பல லட்ச ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AISF, AIYF உள்ளிட்ட இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் DYFI மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் AIYF மாவட்ட தலைவர் அபிமன்யு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “நீட் தேர்வை ரத்து செய்”, “தேசிய தேர்வு முகமையை கலைத்திடு”, “12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திடு” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நீட் தேர்வு முறையே வணிகமாக மாறிவிட்டதாகவும், பல லட்ச ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.