உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலவச BP பரிசோதனை, உணவு ஆலோசனை, பிசியோதெரபி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு, GKNM Hospital மருத்துவமனையின் IOP வளாகத்தில் மே 18 முதல் மே 20 வரை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு மருத்துவக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியை GKNM Hospital தலைமை செயல் அதிகாரி Dr. ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார். அவருடன் IOP மருத்துவ இயக்குனர் Dr. ராகவேந்திரா, மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுப்பது, அதை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக BP பரிசோதனை, உணவுத்துறை ஆலோசனை, பிசியோதெரபி துறையின் உடற்பயிற்சி ஆலோசனை, கண் சிகிச்சைத் துறை ஆலோசனை மற்றும் மாற்று மருத்துவத் துறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மே 18ஆம் தேதி இதயத் துறை, சிறுநீரகத் துறை, பொது மருத்துவத் துறை, நரம்பியல் துறை மற்றும் கண் பரிசோதனைத் துறை மருத்துவர்களால் "உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம்" தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்துறை மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.



மே 19ஆம் தேதி இதயத் துறை மற்றும் பொது மருத்துவத் துறை மருத்துவர்களின் உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மே 20ஆம் தேதி மாற்று மருத்துவத் துறையினரால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், "உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு சாதாரண நோயாக மட்டும் அல்ல; அது வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு நிலை. சரியான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தனர்.



மேலும், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் GKNM Hospital தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச ஆலோசனை முகாம்களை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...