கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் எம்.ஜி.ரோடு, பீளமேடு, குறிச்சி, எஸ்.என்.பாளையம், மார்ச்சிநாயக்கன்பாளையம் மற்றும் தளக்கரை முத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை நகரில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 21.05.2026 அன்று பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதल் மாலை 4 மணி வரை ஐந்து முக்கிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்




எம்.ஜி.ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், எம்.ஜி.ரோடு, SIHS காலனி, காவேரி நகர், J.J நகர் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருக்கும். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே தங்களின் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.




பீளமேடு துணை மின் நிலையம்




பீளமேடு துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் சாலை, புளியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி சாலையின் ஒரு பகுதி, மீனா எஸ்டேட் மற்றும் உடையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாது.




குறிச்சி துணை மின் நிலையம்




குறிச்சி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளால் சிட்கோ, சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, போத்தனூரின் ஒரு பகுதி, ஈச்சனாரி, குறிச்சி, ஏஐசி காலனி, ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.




எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையம்




எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேளாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.




மார்ச்சிநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்




மார்ச்சிநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் மார்ச்சிநாயக்கன்பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பியாகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி பகுதிகளில் மின்நிறுத்தம் இருக்கும்.




தளக்கரை முத்தூர் துணை மின் நிலையம்




தளக்கரை முத்தூர் துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளால் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டிணம், தேவம்பாடி, வள்ளையகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே காலனி மற்றும் வெங்கடேசா காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருக்கும்.




மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அனைத்து பகுதிகளிலும் மின்சார பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படும். வானிலை மற்றும் பிற காரணங்களால் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால் மின் விநியோகம் மீட்டமைக்கப்படும். பொதுமக்கள் இதற்கேற்ப தங்களின் நாளாந்த பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...