கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன் 3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Electrician, Fitter, MMV, Wireman, Welder உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் இலவசப் பயிற்சியுடன் மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.


Coimbatore: கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 3, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician, Fitter, MMV, Wireman (இரண்டு ஆண்டு பயிற்சி காலம்) மற்றும் Welder (ஓராண்டு பயிற்சி காலம்) ஆகிய தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.




இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை உதவி மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.




Wireman மற்றும் Welder தொழிற்பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், Electrician, Fitter, MMV தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.




பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதனுடன் வருகையின் அடிப்படையில் ரூ.750 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.




விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படும்.




மேலும், பயிற்சியாளர்களுக்கு இட வசதி பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...