கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.


கோவை: தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோவையில், பா.ஜ.க மையக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலைஆதரவு போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தற்போது உயர்கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் அண்ணாமலை நேரடியாக பங்கேற்காத சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த போஸ்டர்களில் அண்ணாமலையின் புகைப்படத்துடன், “Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றுள்ளது. அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், “Army of Dheeran Annamalai” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், கோவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தியிருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்குள் புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...