கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.


கோவை: தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோவையில், பா.ஜ.க மையக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலைஆதரவு போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தற்போது உயர்கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் அண்ணாமலை நேரடியாக பங்கேற்காத சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த போஸ்டர்களில் அண்ணாமலையின் புகைப்படத்துடன், “Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றுள்ளது. அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், “Army of Dheeran Annamalai” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், கோவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தியிருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்குள் புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...