பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


கோவை: வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டுமே மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி, பொது இடங்களில் கால்நடைகளை வதை செய்வது சட்டவிரோதம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, கோவையின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களிலும் விதிகளை மீறி மாடுகள் வெட்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தாண்டு பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது, தற்காலிக செட்கள் அமைக்கக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டும் காளை மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கோவை மாவட்ட ஆட்சியாளர், காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் செல்வபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கு மீண்டும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...