அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநில அளவிலான இணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தேனாம்பேட்டை அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய சுகாதாரக் குழும கலந்தாய்வுக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை உரிய மரியாதையுடன் அணுகி தேவையான சிகிச்சைகள் மற்றும் சேவைகள் உடனுக்குடன் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் தரத்தை மதிப்பீடு செய்ய வழங்கப்படும் “காயகல்ப்” தரச் சான்றிதழுக்கான ஆய்வுகளை ஆண்டிற்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அடிப்படையில் நடத்தி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் CEA உரிமச் சான்றிதழ்களில் நிலுவையில் உள்ள சுமார் 8000 விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் தற்காலிக சான்றிதழ்களை உடனடியாக வழங்கி, பின்னர் முழுமையான ஆய்வுக்குப் பிறகு நிரந்தர சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...