சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டதால் POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது POCSO சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி இரவு சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.




மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கண்ணம்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை குற்றவாளி கார்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கில் POCSO சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தினார்.




குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவளை அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதாகவும் ஐஜி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...