“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சா போதைப்பொருளை Coimbatore City Prohibition Enforcement Wing போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.



போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட ஐஷர் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், பொருட்கள் ஏற்றுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரியில் இருந்த கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் அருண்குமார் (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மணிகண்டன் ஏற்கனவே E3 சரவணம்பட்டி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி (HS 01/2021) என்பது தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குற்ற எண் 106/2026-ன் கீழ் NDPS சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...