கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஐஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை :

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கார்த்திக் (33) மற்றும் மோகன்குமார் (30) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி அளித்த பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இருவரையும் ஓராண்டு காலம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, தென்னைத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோரை சூலூர் போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

இதில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிவுகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்குமார் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், இருவர்மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் ஜாமீனில் வெளியே வராமல் தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரை செய்தது.

அதன்பேரில், ரம்யா பாரதி அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், விரைவாக குண்டர் சட்டத்தையும் பாய்ச்சிய கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...