தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள், குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தரும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய நுழைவாயில் மற்றும் வளாகப் பகுதிகளில் மொத்தம் 600 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் சமயங்களில் வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஏற்கனவே இடப்பற்றாக்குறை பிரச்சினை நிலவி வரும் கோவை விமான நிலையத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகையின் போது நிலைமை மேலும் மோசமடைகிறது. நுழைவாயிலில் மூன்று லேன்கள் இருந்தபோதிலும், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் 11.50 மணி வரை சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து மூன்று விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேறிய நேரத்தில், அரசியல் பிரமுகரை வரவேற்க வந்த வாகனங்களால் நுழைவாயில் பகுதி முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்கதையாக மாறிவிட்ட நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண விமான நிலைய நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...