கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்றும் புதுமைக் கருத்துகளை காட்சிப்படுத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. பதிவுக்கு பேராசிரியர் அசாருதீனை 98946 41102 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


கோவை: தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச மாநாட்டை ஒட்டி, சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் 5 வரை கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கோவை மாவட்டம் சார்பில் சிறந்த அறிவியல் சிந்தனை கொண்ட கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

உலகளாவிய சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் புதிய போக்குகள் மற்றும் மாற்றத்திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (HVL) மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி (CIT) இணைந்து, 2026 ஜூன் 3 முதல் 5 வரை CIT வளாகத்தில் 4வது "தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு (AMCEHA 2026)" நடத்துகின்றன.


புதுமைகாண் அமர்வு நடைபெறும்




இந்த சர்வதேச மாநாட்டில் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநாட்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு "புதுமைகாண் அமர்வு" (Innovation Showcase) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைவர் Dr. கலைச்செல்வி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இதில் சிறந்த அறிவியல் சிந்தனை மற்றும் புதுமைக் கருத்துகளை காட்சிப்படுத்தும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அனைவரும் பங்கேற்கலாம்




இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அசாருதீனை 98946 41102 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களில் புதுமையான சிந்தனைகளை முன்வைப்பவர்களுக்கு இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாக அமையும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...