கோவை நீதிமன்ற வளாகத்தில் நாய் துரத்தியதால் சுவரேறி குதித்த வடமாநில வாலிபர் பலி

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சி.சி.டி.வி. காட்சிகளில், நாய் துரத்தியதால் நீதிமன்ற சுவரேறி உள்ளே குதித்த அவர், இருட்டில் தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், இன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் பகுதியில் நடந்து சென்றபோது நாய் ஒன்று அவரை துரத்தியது தெரியவந்தது. நாயிடமிருந்து தப்பிக்க அவர் நீதிமன்ற வளாகத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

அதன்பிறகும் பதற்றத்தில் வேகமாக ஓடியபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையில் ரூ.250 மட்டும் இருந்ததாகவும், அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை வைத்து அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார் என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...