ஆராய்ச்சியாளர்கள் - தொழில்முனைவோர்கள் சந்திப்பு: உணவு தொழில் வளர்ச்சிக்கு TNAU-வில் ‘Connect & Grow’ நிகழ்ச்சி.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘Connect & Grow – Food Business Meet’ நிகழ்ச்சியில், உணவு பதப்படுத்தல் துறையில் செயல்படும் MSME நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) செயல்பட்டு வரும் உயிரித் தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பில், “Connect & Grow – Food Business Meet” நிகழ்ச்சி ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது. உணவு பதப்படுத்தல் துறையில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தகவலியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் எல். அருள் வரவேற்புரை வழங்கினார். உணவு பதப்படுத்தல் துறையின் வேகமான வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், புதுமை, மதிப்புக் கூட்டுதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் மையத்தின் தலைவர் மற்றும் TNAPEX-ன் தொழில்நுட்ப பங்குதாரரான காக்ஸ்பிட் அமைப்பின் இயக்குநர் முனைவர் ந. செந்தில் உரையாற்றினார். புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் MSME நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகள் குறித்து விளக்கிய அவர், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்யும் தரமான உணவுப் பொருட்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்தார்.

மேலும், காக்ஸ்பிட் அமைப்பு தயாரிப்பு உருவாக்கம், பரிசோதனை, தரச் சரிபார்ப்பு, ஒழுங்குமுறை வழிகாட்டுதல் மற்றும் வணிகமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுகளை வழங்கி வருவதாகவும், இது உணவு பதப்படுத்தல் துறையின் போட்டித்திறனை உயர்த்தி நிலையான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.

இயற்கை வள மேலாண்மை இயக்குநரும் தொழில்முனைவோருமான முனைவர் சு. கார்த்திகேயன், அறிவியல் அடிப்படையிலான தயாரிப்பு மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி நிறுவனங்களும் தொழில்துறையும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தயாரிப்புகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய தயாரிப்பு பரிசோதனை, தர உத்தரவாதம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தரநிலைகளை கடைப்பிடிப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் மற்றும் APEDA விதிமுறைகள் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு, சந்தை அணுகலை எளிதாக்கி ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அறிவியல் சரிபார்ப்புகள் மூலம் பண்ணையிலிருந்து நுகர்வோரின் கைகளுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

திருச்சி TNAPEX மண்டல மையம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் திட்ட மேலாளரும் குழுத் தலைவருமான அ. கீர்த்திவாசன், TNAPEX திட்டத்தின் மூலம் தொடக்க நிறுவனங்கள் மற்றும் MSME-களுக்கு வழங்கப்படும்-

புதிய தயாரிப்பு உருவாக்கம், உற்பத்தி வசதி அடையாளம் காணுதல், தயாரிப்பு பதிவு, உரிமம் பெறுதல், ஒழுங்குமுறை இணக்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள், சந்தை இணைப்புகள், பிராண்டிங் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான ஆதரவுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வாய்ப்புகளை தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்தி புதுமைகளை விரைவுபடுத்தி, தங்களது வணிகங்களை விரிவுபடுத்தி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தடம் பதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி. ராஜன்பாபு நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...